கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான பெர்சத்து கட்சியைச் சேர்ந்த இஸ்கண்டார் டிசுல்கர்னயின் அப்துல் காலிட், திடீரென்று தமது ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தெரிவித்துள்ளார் என்றால் அவர் அச்சுறுத்தப்பட்டு இருக்கலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.
கோலகங்சார் எம்.பி. இஸ்கண்டார் டிசுல்கர்னயின்னை அணுகிய வர்த்தகர் ஒருவர், பிரதமருக்கு ஆதரவு நல்கினால் பெரும் தொகை கொடுப்பதாக பேரம் பேசியுள்ளார். அதற்கு அவர் உடன்பாடாததைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்றதாக கூறி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மூலம் அவர் மிரட்டப்பட்டுள்ளார் என்று ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது


