கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான பெர்சத்து கட்சியைச் சேர்ந்த இஸ்கண்டார் டிசுல்கர்னயின் அப்துல் காலிட், திடீரென்று தமது ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தெரிவித்துள்ளார் என்றால் அவர் அச்சுறுத்தப்பட்டு இருக்கலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.
கோலகங்சார் எம்.பி. இஸ்கண்டார் டிசுல்கர்னயின்னை அணுகிய வர்த்தகர் ஒருவர், பிரதமருக்கு ஆதரவு நல்கினால் பெரும் தொகை கொடுப்பதாக பேரம் பேசியுள்ளார். அதற்கு அவர் உடன்பாடாததைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்றதாக கூறி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மூலம் அவர் மிரட்டப்பட்டுள்ளார் என்று ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!


