Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்

Share:

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் மறைவு தொடர்பாக விரும்பத்தகாத கருத்துக்களை பதிவேற்றியதற்காகவும், இஸ்லாத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும் ஆடவர் ஒருவருக்கு 10 மாத சிறைத் தண்டனையும் RM50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜான் முலே அனக் அலாய் என்ற அந்த 48 வயது ஆடவர் மீது 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. மற்றவர்களை புண்படுத்தும் அல்லது தொந்தரவு கொடுக்கும் நோக்கத்துடன் விரும்பத்தகாத தகவலைப் பதிவேற்றியதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இதனிடையே, மதத்தை அவமதிக்கும் அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளைப் பதிவேற்ற இலக்கயியல் தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைக் கடுமையான ஒன்றாகக் கருதுவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News