கொந்தளிப்பு அதிகரித்து வரும் மத்தியக் கிழக்கில் இருந்து, முதலாவது மலேசியக் குழு பாதுகாப்பாக தாயகம் வந்தடைந்துள்ளது. 163 மலேசியர்கள் கொண்ட அக்குழு இன்று நண்பகல் MH8503 விமானத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்தது.
அவ்விமானத்தில் மலேசியர்கள் அல்லாத எழுவரும் இருந்தனர். அவர்களில் ஐவர் தாய்லாந்து நாட்டவர்கள். ஒருவர் இந்தோனேசியர் மற்றும் ஒருவர் மொராக்கோ நாட்டவர்.
வெளியுறவு அமைச்சின் முயற்சியில் தனி விமானம் மூலம் அவர்கள் ஜெடாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
சவுதி அரேபியாவில் உம்ரா கடமையில் ஈடுபட்டிருந்த போது சிக்கிக் கொண்டவர்கள், விமானப் போக்குவரத்துத் தடை, வான்வெளி மூடல் நடவடிக்கை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.








