மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹப்பீஸ் காசி ஆகிய இருவரும் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, குலாய் இரயில் நிலையத்தில் நடைபெற்ற ஷட்டில் செலாத்தான் சேவைத் தொடக்க விழாவில் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்த அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், புதிய கேடிஎம் சேவையை ஒன்றாகப் பயணித்து பார்வையிட அந்தோணி லோக் விடுத்த அழைப்பை ஏற்று ஓன் ஹபீஸ் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலையொட்டி, கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் மாறி மாறி கருத்துக்களைப் பகிர்ந்து வந்த நிலையில், இவர்களின் இந்த நேருக்கு நேர் சந்திப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜோகூர் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள டிஏபி கட்சியுடன் கூட்டு வைக்கப் போவதில்லை என்று ஒன் ஹப்பீஸ் அண்மையில் கூறியிருந்த கருத்துக்கு, கூட்டாட்சி அரசாங்கத்தில் நாம் இணைந்துதான் செயல்படுகிறோம் என்று அந்தோணி லோக் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








