2025-ஆம் ஆண்டிற்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மலேசியத் தேர்வுக் கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் ஜூன் 18-ஆம் தேதி காலை 11:00 மணி முதல், தங்களின் குறுஞ்செய்தி மூலமாக முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
அதற்கு எஸ்டிபிஎம் (இடைவெளி) மைகார்ட் எண் (இடைவெளி) தேர்வு சுட்டு எண் என டைப் செய்து 15888 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அல்லது அன்று காலை 11:30 மணி முதல் stpm.mpm.edu.my/stpmK என்ற இணையத்தளம் வழியாகவும் தங்களின் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்வுக் கழகம் அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.









