அடுத்த தலைமுறையினரிடம் நேர்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்-மின் இளம் படைப் பிரிவு முன்னோடித் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் படிப்படியாகத் தொடங்கப்படும் என்று எஸ்பிஆர்எம்-மின் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த முன்னோடித் திட்டம் முதலில் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் திராங்கானுவில் உள்ள ஒவ்வொரு பள்ளியில் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த முயற்சியில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களும் முக்கிய பங்காளிகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் வயதிலிருந்தே வழங்கப்படும் கல்வியும் விழிப்புணர்வும் ஊழலை எதிர்க்கும் ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கு மிக முக்கியமானது என்பதால், நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு திட்டங்களை அதிகளவில் நடத்துவதற்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தங்களின் முக்கியக் கூட்டுறவை விரிவுபடுத்துமாறு எஸ்பிஆர்எம்-மின் மாநில கிளைகளையும் அப்துல் ஹாலிம் கேட்டுக்கொண்டுள்ளார்.








