தாய்லாந்து நாட்டின் ஹுவா ஹின் பகுதியில் 166 கிலோ ஷாபு போதைப்பொருளை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்ததுடன், 20 வயதுடைய மலேசிய இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 8 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, பேங்காங்-லிருந்து தெற்கு தாய்லாந்து-க்கு போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளை நிற பி.எம்.டபுள்.யு காரை போலீசார் கண்காணித்தனர்.
ஹுவா ஹின் சோதனைச் சாவடியில், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த பி.எம்.டபுள்.யு காரை துரத்திச் சென்று மடக்கிய பின்னர், அதிலிருந்த பயணப் பெட்டிகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.








