மலேசியாவில் இவ்வாண்டு டிங்கி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்தாண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாடெங்கிலும் 55 ஆயிரத்து 855 டிங்கி பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 55 ஆயிரத்து 399 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.
எல் நினோ வானிலை மாற்றம், தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டி.என்.வி-3 வகை வைரஸ் காரணமாக கடுமையான டிங்கி பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகவே, மக்கள் தங்களின் வீடு, பணியிடம் மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்ற வேண்டும் என்றும், காய்ச்சல், தடிப்புகள், உடல்வலி, மூட்டு வலி, தலைவலி அல்லது இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








