பினாங்கு, பத்து ஃபிரிங்கி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகளா என்ற பரபரப்பு எழுந்த நிலையில், அவை குதிரையின் எலும்புகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகலில் கடற்கரைப் பகுதியில் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் வடிவம் மனித எலும்புகளைப் போன்று இருந்ததால் பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, தடயவியல் மருத்துவ நிபுணர்கள் அந்த எலும்புகளைப் பரிசோதித்தனர். பினாங்கு தலைமை தடயவியல் நிபுணர் டாக்டர் பி. சந்திரோத் நவின், அவை குதிரையின் எலும்புகள் என்பதை உறுதி செய்ததாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அப்துல் ரொசாக் முஹம்மட் தெரிவித்தார்.
இதனால், இந்தச் சம்பவத்தில் மனித எலும்புகள் எதுவும் இல்லை என்றும் போலீஸ் துறை தெளிவுபடுத்தியுள்ளது.








