Aug 9, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டுத் திரும்பியது
தற்போதைய செய்திகள்

மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டுத் திரும்பியது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.16-

பிலிப்பைன்ஸ், மணிலாவிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம், பறவைகள் மோதியதால் அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டுத் திரும்பியது. MH705 விமானம் Ninoy Aquino அனைத்துலக விமான நிலையத்திற்குப் பத்திரமாகத் திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திரம் செயலிழந்து தீப் பிடித்ததாக எக்ஸ் பயனர் ஒருவர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இயந்திரத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தார். விமானி அவர் தன் குழுவினரின் பாதுகாப்பான நடவடிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்தார். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், பயணத் திட்டத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து