ஜோகூரில் காற்று மாசு குறியீடானது 200-ஐ கடக்கும் பட்சத்தில், அனைத்து பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்று காலை சிகாமாட் மற்றும் பத்து பஹாட் பகுதிகளில் API 157-ஆகவும், தங்காக்கில் 153-ஆகவும், குளுவாங்கில் 151-ஆகவும் பதிவாகி, காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
மேலும், வெப்பம் மற்றும் புகைமூட்டம் காரணமாக பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தேவைப்பட்டால் அவற்றைக் குறைக்க மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் API அளவு 200-ஐ கடந்தால், தற்போதுள்ள செயல்பாட்டு நடைமுறைகளின்படி பள்ளிகளை உடனடியாக மூடுவதற்குத் தயாராக இருப்பதாக ஜோகூர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.








