Sep 7, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன 6 பேரைத் தேடும் பணியில் 14 மலை வழிகாட்டிகள்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன 6 பேரைத் தேடும் பணியில் 14 மலை வழிகாட்டிகள்

Share:

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி போஸ் டாகோ (Pos Dakoh) வழியாக வனப் பகுதிக்குள் சென்ற பின்னர் காணாமல் போன ஆறு பேரைத் தேடும் பணியில் 14 வனப்பகுதி மலை வழிகாட்டிகள் இணைந்துள்ளனர்.

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வழிகாட்டிகளும், கிளந்தானைச் சேர்ந்த எட்டு வழிகாட்டிகளும் இன்று திங்கள்கிழமை, மூன்று நான்கு சக்கர வாகனங்களில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடைபெறும் பகுதிக்குள் சென்றனர்.

காணாமல் போன குழுவில் நான்கு குடும்ப உறுப்பினர்களும் இரு மலை வழிகாட்டிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்களைத் தேடும் பணியில் இதுவரை புதிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், குழுவின் கடைசி இருப்பிடம் பேராக் மாநில வனப் பகுதியில் இருந்தது தெரிய வந்துள்ளது.

போஸ் டாகோ வழியாக நுழைந்த அக்குழுவினர், பேராக் மாநிலத்தில் உள்ள போஸ் கெமார் (Pos Kemar) வழியாக வெளியேறத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மிகப் பெரிய போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

சிரம்பான் குடியிருப்புப் பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மிகப் பெரிய போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

ஒதுக்கப்பட்ட நிதியை மீறி செலவிடவில்லை – ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

ஒதுக்கப்பட்ட நிதியை மீறி செலவிடவில்லை – ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

ஃபெல்டா நில விற்பனை முறைகேடு: முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 5 நாள் தடுப்புக் காவல்

ஃபெல்டா நில விற்பனை முறைகேடு: முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 5 நாள் தடுப்புக் காவல்

காற்று மாசுக் குறியீடு 200-ஐ கடந்தால் ஜோகூரில் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மூடப்படும்

காற்று மாசுக் குறியீடு 200-ஐ கடந்தால் ஜோகூரில் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மூடப்படும்

ஜகார்த்தாவில் விமானங்கள் ரத்து: 10 ஆயிரம் ரிங்கிட் செலவழித்து நாடு திரும்பும் மலேசியர்கள்

ஜகார்த்தாவில் விமானங்கள் ரத்து: 10 ஆயிரம் ரிங்கிட் செலவழித்து நாடு திரும்பும் மலேசியர்கள்

ஈப்போவில் வீட்டின் முன் மோதி நின்ற லோரி -  தாயும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஈப்போவில் வீட்டின் முன் மோதி நின்ற லோரி - தாயும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்