Sep 4, 2026
Thisaigal NewsYouTube
கோஃல் உதவியாளரிடம் அத்துமீறல்: 'டத்தோ' பட்டம் பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கோஃல் உதவியாளரிடம் அத்துமீறல்: 'டத்தோ' பட்டம் பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

‘டத்தோ’ பட்டம் பெற்ற 68 வயதான முன்னாள் ராணுவ அதிகாரி யஹ்யா ஹாஷிம், 20 வயது பெண் கோல்ஃப் உதவியாளரின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் அத்துமீறல் புரிந்ததாக மலாக்கா ஆயர் கேரோ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்தச் சம்பவமானது கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி டியாரா மலாக்கா கோல்ஃப் & கன்ட்ரி கிளப்-ல் காலை 8.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் நடந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டை மறுத்த யஹ்யா ஹாஷிம், நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம் பிரிவு 354-ன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Related News

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்

பெர்லிஸில் ஆலயம் இடிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய டிக்டாக் பதிவு – ஒருவர் கைது

பெர்லிஸில் ஆலயம் இடிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய டிக்டாக் பதிவு – ஒருவர் கைது

காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமான மலேசிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை

காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமான மலேசிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை

மலேசியா ஏர்லைன்சின் 99 சதவிகித விமானப் பணியாளர்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை நிறைவு

மலேசியா ஏர்லைன்சின் 99 சதவிகித விமானப் பணியாளர்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை நிறைவு

"ஸ்மார்ட் '' குழு எந்த நேரத்திலும் புறப்படத் தயாராக உள்ளது - நேபாள தூதரிடம் விஸ்மா புத்ரா உறுதி

"ஸ்மார்ட் '' குழு எந்த நேரத்திலும் புறப்படத் தயாராக உள்ளது - நேபாள தூதரிடம் விஸ்மா புத்ரா உறுதி

கெசாஸ் நெடுஞ்சாலையை மூடிய பனிபொழிவு? - உண்மையில் நடந்தது என்ன?

கெசாஸ் நெடுஞ்சாலையை மூடிய பனிபொழிவு? - உண்மையில் நடந்தது என்ன?