நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அவசர உதவி மற்றும் மீட்புப் பணிகளுக்காக, ஸ்மார்ட் குழுவை எந்த நேரத்திலும் அந்நாட்டிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக மலேசிய வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள நேபாள தூதரகத்திற்குச் சென்ற அவர், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், நேபாள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மலேசியா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
மேலும், இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
இதற்கிடையில், நேபாள அரசின் சார்பில் அந்நாட்டு தூதர் முதிதா பாஜ்ராச்சார்யா, துயரமான இந்த நேரத்தில் மலேசியா தெரிவித்த இரங்கலுக்கும், நேபாள மக்களுடன் வெளிப்படுத்திய ஒற்றுமைக்கும் துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
அதேவேளையில், மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதியுதவிக்கும் அவர் நன்றி தெரிவித்ததாக நேபாள தூதரகம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 4,200-க்கும் அதிகமானோர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.








