Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு நிகழ்வை சீர்குலைக்க முற்படுவதா? பாஸ் கட்சி கண்டனம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு நிகழ்வை சீர்குலைக்க முற்படுவதா? பாஸ் கட்சி கண்டனம்

Share:

பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதர்கள் இழைத்து வரும் அடக்கு முறையை கண்டித்து, மனிதாபிமான உணர்வுடன் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு நல்க பள்ளிகளில் நடத்தப்படும் ஒருமைப்பாட்டு வாரத்தை எதிர்க்கும் டிஏபி யின் நடவடிக்கைக்கு பாஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறையினால் நசுக்கப்படும் மக்களுக்கு இனம், சமயப் பேதமின்றி மலேசியா தனது தார்மீக ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தின மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் மலேசியாவின் நடவடிக்கையை குறைகூறி வரும் டிஏபி தலைவர்கள் தார்மீக ஆதரவின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்று பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நஸ்ருடின் ஹாஸ்ஸான் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் நடத்தப்படும் பாலஸ்தீன மக்களுக்கான ஒருமைப்பாட்டு ஆதரவு இயக்கமானது மாணவமணிகள் மத்தியில் இளம் பிராயத்திலேயே மனிதாபிமானத்தை ஊட்டும் திட்டமாகும். அதனை வன்செயலுடன் ஒப்பிட்டு டிஏபி குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும் என்று நஸ்ருடின் ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு