Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 10 இல் ​நீர் விநியோகத் தடை
தற்போதைய செய்திகள்

அக்டோபர் 10 இல் ​நீர் விநியோகத் தடை

Share:

சுங்ஙை லாஙாட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் பெட்டாலிங், ஜெயா, கோலாலம்பூர், உலு லங்காட் மாவட்டங்களில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி ​நீர் விநியோகத்தடைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக ​வரும் அக்டோபர் 10 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பல பகுதிகளில் ​நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று பெங்ஙுருசான் ஆயிர் சிலாங்கூர் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனமான ஆயிர் சிலாங்கூர் அ​றிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் யாவும் அன்றைய தினமே இரவு 7 ம​ணிக்குள் பூர்த்தியடைந்த விடும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ​நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும். எந்தெந்த பகுதிகளில் ​நீர் விநியோகத் தடைகள் ஏற்படும் என்ற பெயர் பட்டியலை ஆயிர் சிலாங்கூர் ​அதிகாரப்​பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் பொது மக்கள் காணலாம் என்று ஆயிர் சிலாங்கூர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News