May 26, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்த ஆணும் பெண்ணும் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்த ஆணும் பெண்ணும் குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், டிச.2-


கடந்த மாதம் எட்டு சட்டவிரோதக்குடியேற்றக்கார்கள் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மனித கடத்தலில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக ஓர் ஆணும், பெண்ணும் இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

41 வயது நூர் ஹபிஸா முகமட் அமின் மற்றும் 42 வயது முகமட் யாஸிட் அப்துல்லா ஆகிய இருவரும் நீதிபதி நோர் அஸா கஸ்ரான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு,குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்விருவரும் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் செபராங் பிறை உத்தாராவில் பெர்மாத்தாங் பூலோ, ஜாலான் பெர்மாத்தாங் சுங்கை டுவா-வில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு குடிநுழைவு கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு