மூடா மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் உள்ள ஆறு இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில், 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவகங்கள், கட்டுமானத் தளங்கள் உள்ளிட்ட இடங்களில் 72 பேரைச் சோதித்ததில், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த மியான்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 24 ஆண்கள், 8 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 34 பேர் பிடிபட்டனர்.
செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் காலாவதியான விசா போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கெடா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் Mohd Ridzzuan Mohd Zain தெரிவித்தார். கைதான அனைவரும் மேல் விசாரணைக்காகப் பெலாந்திக் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.








