Jun 16, 2026
Thisaigal NewsYouTube
"முடியாட்சியின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவோம்" - மாமன்னருக்கு அன்வார் பிறந்தநாள் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

"முடியாட்சியின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவோம்" - மாமன்னருக்கு அன்வார் பிறந்தநாள் வாழ்த்து

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்வார் தமது பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் இறைவனின் அருள், பாதுகாப்புடன் வாழ பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாமன்னர், நீதி, ஞானம் மற்றும் விவேகத்துடன் நாட்டை வழிநடத்தி, கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் உயரிய பதவியைச் சிறப்பாக வகிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலராகவும், நாட்டின் பல்லின மக்களுக்கிடையேயான ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகவும் முடியாட்சி தொடர்ந்து திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாமும், மலேசிய மக்களும் அரசியலமைப்பு முடியாட்சியின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்றும், மாமன்னர் நீடூழி வாழ்க என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்