மலேசியாவில் உள்ள அனைத்து ஏ.டி.எம் இயந்திரங்களிலும், பிற வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுப்பதற்கான 1 ரிங்கிட் எம்.இ.பி.எஸ் இடைவங்கி கட்டணம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பொதுமக்களின் அன்றாட நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், மலேசிய வங்கிகளின் சங்கமான ஏ.பி.எம், இஸ்லாமிய வங்கி நிறுவனங்களின் சங்கம் மற்றும் மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 'பேநெட்' நிறுவனத்துடன் இணைந்து இந்த அதிரடி கூட்டு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளன.








