Oct 26, 2025
Thisaigal NewsYouTube
அனுபவமே கல்வி: எஸ்பிஎம் முடித்த இலட்சக்கணக்கானோரின் திறமையை அங்கீகரிக்கும் 'APEL' திட்டம்!
தற்போதைய செய்திகள்

அனுபவமே கல்வி: எஸ்பிஎம் முடித்த இலட்சக்கணக்கானோரின் திறமையை அங்கீகரிக்கும் 'APEL' திட்டம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.26-

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் முறையான கல்வித் தகுதி இல்லாத போதும், மதிப்புமிக்க வேலை அனுபவத்துடன் வேலைக்குச் செல்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் எஸ்பிஎம் முடித்தவர்களில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உயர் கல்விக்குச் செல்லாத நிலையில், அனுபவம் மிக்க இந்தப் பணியாளர்கள் முறையான தகுதி இல்லாததால் வளர்ச்சியடையத் தடுமாறுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, உயர்க்கல்வி அமைச்சின் APEL எனப்படும் முந்தைய கற்றல் அடிப்படையிலான அங்கீகாரத் திட்டம், வேலையில் உள்ளவர்களுக்கு ஓர் இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது என FMT செய்தி வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் தங்கள் பணியின் அடிப்படையிலும் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலும் நேரடியாக டிப்ளோமா, இளங்கலை அல்லது முதுகலை படிப்பில் சேரலாம் அல்லது முழுமையான கல்வித் தகுதியைப் பெறலாம். இதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்திற்கு முறையான அங்கீகாரம் பெறுவதோடு, தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் ஊதியத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று துணை அமைச்சர் முஸ்தபா சாக்மூட் தெரிவித்தார்.

Related News

டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக்கமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக்கமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 பள்ளிகள்: மாணவர்களுக்கு 2 நாட்கள் 'வீட்டிலிருந்தே கற்றல் - கற்பித்தல்'!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 பள்ளிகள்: மாணவர்களுக்கு 2 நாட்கள் 'வீட்டிலிருந்தே கற்றல் - கற்பித்தல்'!

இன்ஃபுளுவென்ஸா பாதிப்பு உயர்வு: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

இன்ஃபுளுவென்ஸா பாதிப்பு உயர்வு: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

கார்ப்பரேட் உடையுடன் வந்த 6 பேர்: "உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை" எனக் கூறி வங்காளதேசிகளைத் திருப்பி அனுப்பிய எல்லைக் காவற்படை!

கார்ப்பரேட் உடையுடன் வந்த 6 பேர்: "உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை" எனக் கூறி வங்காளதேசிகளைத் திருப்பி அனுப்பிய எல்லைக் காவற்படை!

LPT2 நெடுஞ்சாலையில் கார் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் 23 வயது இளைஞர் பலி!

LPT2 நெடுஞ்சாலையில் கார் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் 23 வயது இளைஞர் பலி!

வெள்ளத்தைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்: துணைப்பிரதமர் நினைவுறுத்து

வெள்ளத்தைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்: துணைப்பிரதமர் நினைவுறுத்து