Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை
தற்போதைய செய்திகள்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

Share:

இம்மாதத் தொடக்கத்தில் கோலா கிராயில் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை தங்கும் விடுதியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மரணமடைந்ததற்கும், அதே மருத்துவமனையில் நிகழ்ந்த பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை.

ஒரே இடத்தில் நடந்த அவ்விரு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளும் பாதிக்கப்பட்டவர்களும் வெவ்வேறு நபர்கள் என கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமது யூசோப் மாமத் தெரிவித்தார்.

பெண் பயிற்சி மருத்துவரின் மரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அது தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 6 ஆம் தேதி மருத்துவமனை தங்கும் விடுதி அறையில் 29 வயதான அந்தப் பெண் பயிற்சி மருத்துவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது, ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்