Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

Share:

பேராக் மாநிலத்தில் உள்ள ஆலயம் ஒன்றில், சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், 33 வயதான ஆடவருக்கு ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றம் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மரச்சாமான்கள் விற்பனைக் கடை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றும் அந்நபர், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது, குற்றவியல் சட்டம் பிரிவு 295-இன் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை,சன்வே சிட்டியிலுள்ள அந்த ஆலயத்தின் பலிபீடத்தை அவர் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று காலை 8 மணியளவில், போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆலய கண்காணிப்பு கேமரா பதிவுகளில், அவர் சேதப்படுத்திய காட்சிகள், தெளிவாக பதிவாகியிருந்ததாக நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது