Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

Share:

சபா மாநிலம் கினபாடாங்கான் பகுதியில் உள்ளகம்பங் செகாலியுட் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் இன்று காலை மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

28 வயதான ரய்யான் அப்துல்லா நேற்று இரவு, தனது தந்தையுடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முதலை தாக்கியதாக நம்பப்படுகின்றது.

இதனையடுத்து, நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், இன்று காலை 9.55 மணியளவில், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், அவரது உடல் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கினபாடாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைத் தலைவர் ஹைரி ஓது தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட உடலில் கை கால்கள் போன்ற உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவமானது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது