May 5, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் 355,000 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 லிட்டர் டீசல் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் 355,000 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 லிட்டர் டீசல் பறிமுதல்

Share:

குவாந்தான், மே.05-

குவாந்தானில் உள்ள மலேசியா-சீனா தொழில்துறை பூங்கா ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 3 லட்சத்து 55 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள, 59 ஆயிரம் லிட்டர் டீசலை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சோதனையானது ‘Op Tiris 4.0’ என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் பகாங் மாநில இயக்குநர் ஜெஸ்லிலி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், முறையான உரிமம் இன்றி டீசல் சேமித்து வைக்க அந்த வளாகமானது பயன்படுத்தப்பட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 57 ஆயிரம் லிட்டர் டீசல் கொண்ட ஐந்து கொள்கலன் தொட்டிகளும், சுமார் 2,000 லிட்டர் டீசல் ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெஸ்லிலி ஜமாலுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News