பசிர் கூடாங் பகுதியில் உள்ள தாமான் ஆயர் பிரு குடியிருப்பில் வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீக்காயமடைந்தனர்.
இச்சம்பவமானது, நேற்று இரவு சுமார் 9.26 மணியளவில், பிளாக் 14-ன் மூன்றாவது மாடி வீட்டில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைத் தலைவர் பிர்தௌஸ் அஹ்மத் கூறுகையில், அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் 5 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தீ விபத்திற்கான காரணம் வாயுக் கசிவு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.








