Jun 29, 2026
Thisaigal NewsYouTube
700 இந்திய தொழில்முனைவோருக்கு 50,000 ரிங்கிட் வரை மானியம்: மித்ரா அதிரடி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

700 இந்திய தொழில்முனைவோருக்கு 50,000 ரிங்கிட் வரை மானியம்: மித்ரா அதிரடி அறிவிப்பு

Share:

மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, , நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியச் சமூகத்தின் பங்களிப்பை வலுப்படுத்த 'உயர்வு மடானி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 700-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்முனைவோருக்கு 50,000 ரிங்கிட் வரை நிதி உதவி வழங்கப்படும்.

வியாபார வளர்ச்சியின் அடிப்படையில் மைக்ரோவிற்கு 20,000 ரிங்கிட் வரையிலும், குரோத் திட்டத்திற்கு 35,000 ரிங்கிட் வரையிலும், ஹை திட்டத்திற்கு 50,000 ரிங்கிட் வரையிலும் மூன்று பிரிவுகளாக இந்த மானியம் பிரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 55 வயதிற்குட்பட்ட இந்தியர்கள், மலேசியப் பிரஜைகளாகவும், எஸ்எஸ்எம் வணிகப் பதிவைக் கொண்டிருக்கவும் வேண்டும். விண்ணப்பங்கள் இன்று தொடங்கி, வரும் ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

700 இந்திய தொழில்முனைவோருக்கு 50,000 ரிங்கிட் வரை மானியம்... | Thisaigal News