Jul 12, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மீன் பிடிக்கச் சென்றவர் படுகொலை? துணியில் சுற்றப்பட்ட சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

சபாவில் மீன் பிடிக்கச் சென்றவர் படுகொலை? துணியில் சுற்றப்பட்ட சடலம் மீட்பு

Share:

சிபித்தாங், ஜூலை.12-

சபா மாநிலம் சிபித்தாங்கில் மீன் பிடிக்கவும், வேட்டையாடவும் சென்ற நபர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், துணியில் சுற்றப்பட்ட அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி நண்பர்கள் இருவருடன் சென்ற அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் கடந்த ஜூலை 8-ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர்.

அவருடன் சென்ற இரு நண்பர்கள் மட்டும் ஜூலை 5-ஆம் தேதி திரும்பியிருந்தனர்.

விசாரணைக்காக நண்பர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Related News