Jul 12, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது
தற்போதைய செய்திகள்

கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது

Share:

சைபர்ஜெயா, ஜூலை.12-

பல்கலைக்கழக விடுமுறையில் கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர், சைபர்ஜெயாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனையில் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடையதாக நம்பப்படும் அப்பெண், இந்தோனேசியாவில் இரட்டை பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், படிப்புச் செலவிற்காக இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 'ஓப் நோடா’ நடவடிக்கையின் போது, அப்பெண்ணுடன் சேர்த்து மூன்று தாய்லாந்து பெண்கள், ஐந்து இந்தோனேசிய பெண்கள் மற்றும் ஓர் உள்ளூர் ஆடவர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News