கோலாலம்பூர், ஜூலை.12-
கத்தாரை பிராந்திய வல்லரசாக மாற்றிய முன்னாள் அமீர், Sheikh Hamad bin Khalifa Al Thani தமது 74-வது வயதில் காலமானார்.
கடந்த 1995 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில், கத்தாரை ஆட்சி செய்த அவர், பின்னர் தனது மகன் மற்றும் தற்போதைய அமீரான, Sheikh Tamim-மிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.
அவரது மறைவை கத்தாரின் அமிரி திவான் என்றழைக்கப்படும் அரசின் உயர்மட்ட நிர்வாக அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், Sheikh Hamad bin Khalifa Al Thani-யின் மறைவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹமாத்தின் தலைமையில் கத்தார் பொருளாதார ரீதியாக முன்னேறி, உலக அரங்கில் செல்வாக்குமிக்க நாடாக உயர்ந்ததாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆட்சியை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைத்தது அவரது தொலைநோக்கு தலைமையின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், அவர் மலேசியாவின் நெருங்கிய நண்பர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.








