கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஜொகூர், பெங்கராங், சுங்கை தாஞ்சூங் செரிண்டித் பகுதியில் உள்ள உலு பாப்பான் ஆற்றில் மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு 9 மணியளவில் கோட்டா திங்கி போலீஸ் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்திலேயே சந்தேகத்திற்கு இடமான முறையில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் பாசிர் கூடாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.








