நெகிரி செம்பிலான், ஜூன் 21-
நெகிரி செம்பிலான், தம்பின்- னில் கட்டுமானத்தளம் ஒன்றில் நிகழ்ந்த மண் சரிவில் வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி புதையுண்டார்.
இச்சம்பவம் இன்று காலை 10.50 மணியளவில் நிகழ்ந்தது. அந்த கட்டுமானத் தளத்தில் பெரிய குழியைத் தோண்டும் பணியின் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஈடுபட்டிருந்த போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.
இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 29 வயதுடைய அந்த அந்நியப் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அமிருதியன் சரிமான் தெரிவித்தார்.








