பெண் ஒருவர் செலுத்திய பெரோடுவா மைவி கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, கால்வாயில் விழுந்ததில் படுகாயத்திற்கு ஆளானார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் ஷா ஆலம், செக்ஷன் 18 இல் நிகழ்ந்தது. இது தொடர்பாக அவசர அழைப்பை பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், ஏணியைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை மீட்டனர். தலையில் கடும் காயத்திற்கு ஆளான 25 வயது மதிக்கத் தக்க அந்தப் பெண், பின்னர் சுகாதார இலாகாவின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


