பெண் ஒருவர் செலுத்திய பெரோடுவா மைவி கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, கால்வாயில் விழுந்ததில் படுகாயத்திற்கு ஆளானார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் ஷா ஆலம், செக்ஷன் 18 இல் நிகழ்ந்தது. இது தொடர்பாக அவசர அழைப்பை பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், ஏணியைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை மீட்டனர். தலையில் கடும் காயத்திற்கு ஆளான 25 வயது மதிக்கத் தக்க அந்தப் பெண், பின்னர் சுகாதார இலாகாவின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


