பெண் ஒருவர் செலுத்திய பெரோடுவா மைவி கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, கால்வாயில் விழுந்ததில் படுகாயத்திற்கு ஆளானார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் ஷா ஆலம், செக்ஷன் 18 இல் நிகழ்ந்தது. இது தொடர்பாக அவசர அழைப்பை பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், ஏணியைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை மீட்டனர். தலையில் கடும் காயத்திற்கு ஆளான 25 வயது மதிக்கத் தக்க அந்தப் பெண், பின்னர் சுகாதார இலாகாவின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


