நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமை பதவியிறக்க முயல்வதாகவும், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸை நீக்க சதி செய்வதாகவும் கூறப்படும் புகார்களை மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் முற்றாக மறுத்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறிய அவர், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய மாநில அரசை தானே ஏன் கவிழ்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சி அமைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், புதிய மந்திரி பெசாருக்கு அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.








