தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு
பேரா மாநிலத்தின் தைப்பிங் மாவட்டப் புதிய போலீஸ் தலைவராக எசிபி. சரவணன் சண்முகம் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்வு விழாவில் அவருக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் எனும் அந்தஸ்தை தாங்கிய எசிபி எனும் உயர்பதவிக்கான சின்னமும் சூட்டப்பட்டது.
பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி சைனால் அபிதீன் , தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவர் ஏசிபி. சரவணனுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். சரவணனின் சிறந்த தலைமைத்துவப் பண்பு, தைப்பிங் வட்டாரப் பொதுமக்களுக்கான போலீஸ் துறையின் சேவையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தச் சிறப்புமிக்கப் பொறுப்பேற்பு விழாவில் பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் டிசிபி முகமது அஸ்லின் சடாரி, பேரா மாநில குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தலைவர் எஸ்ஏசி ரோஸ்லான் பின் யூசோப் முகமது, பேரா மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குமுறைத் துறை தலைவர் எஸ்ஏசி முகமது தவ்ஃக் மைடின் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.








