Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சக நண்பனின் கழுத்தறுத்து விட்டு தப்பியோடிய நபர்!
தற்போதைய செய்திகள்

சக நண்பனின் கழுத்தறுத்து விட்டு தப்பியோடிய நபர்!

Share:

சிரம்பான், செப்டம்பர்.07-

சிரம்பான், தாமான் ராசா ஜெயா பகுதியில், ஒரு வீட்டில் நடந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வீட்டில் ஒன்றாய் தங்கி இருந்த இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவன் ஆத்திரத்தில் தன் நண்பனின் கழுத்தைக் கத்தியால் அறுத்து விட்டுத் தப்பியோடியுள்ளான்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவற்படையினர் உடனடியாக குற்றவாளியைத் தேடும் பணியை முடுக்கி விட்டிருந்தனர். தப்பியோடிய குற்றவாளி, ஒரு விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அதிகாலை வேளையில் காவற்படை அவரைக் கைது செய்ததாக சிரம்பான் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹட்டா சே சின் தெரிவித்தார். இந்த விபரீத சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், காவற்படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி