Mar 31, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப்பாதிப்பினால் 10 ஆயிரத்து 272 பேருக்கு நீர்வழி நோய்கள் கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பாதிப்பினால் 10 ஆயிரத்து 272 பேருக்கு நீர்வழி நோய்கள் கண்டு பிடிப்பு

Share:

டிச. 7-

வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிளந்தான், திரெங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பேரா ஆகிய மாநிலங்களில் உள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களில் பத்தாயிரத்து 272 பேருக்கு நீர்வழி நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.

இவர்களில் 6,730 பேர் சுவாச நோய்த் தொற்றுகள், 3,021 பேர் தோல் நோய்த் தொற்றுகள், 298 பேர் கடும் இரைப்பை குடல் அழற்சி, 190 பேர் வெண்படல அ லற்சி, 20 பேர் சின்னம்மை, 13 பேர் வாய்த்தொற்று நோய் ஆகியவற்றுக்கு ஆளாகியிருப்பது சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுவதாக அமைச்சர் Dr Dzulkefly Ahmad குறிப்பிட்டுள்ளார்.

Related News