Apr 1, 2026
Thisaigal NewsYouTube
Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை

Share:

டிச. 29-

தென் கொரியாவில் Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. சியோலில் உள்ள மலேசிய தூதரகம் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் தேவையான தகவல்களைச் சேகரித்து வருகிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை எந்த மலேசியரும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மலேசிய அரசாங்கம் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

தவி அல்லது தகவல் தேவைப்படும் மலேசியர்கள் சியோலில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இருக்கும் மலேசியர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற வழிவகை செய்கிறது.

Jeju Air 7C2216 விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சுவரை மோதியதால் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 181 பயணிகள் இருந்தனர். தற்போது வரையில் குறிந்தது 120 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்