தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வரும் நவம்பரில் எதிர்பார்க்கப்படும் கடுமையான 'சூப்பர் எல் நினோ' வெப்ப அலையை எதிர்கொள்ளத் தனது செயல்பாட்டு உபகரணங்களை பலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதன் முதற்கட்டமாக, காடுகளுக்குள் விரைந்து சென்று தீயை அணைக்கும் வகையில் 80 தீயணைப்பு பம்புகள் பெறப்பட்டுள்ள வேளையில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 பம்புகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் துறைக்கு வழங்கப்படவுள்ளன.
தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோவினால் ஏற்படும் காட்டுத்தீ போன்ற சவால்களை மிக விரைவாகக் கையாளுவதற்கு புதிய செயல்பாட்டு தளவாடங்கள் தங்களுக்குப் பெரிதும் உதவும் என தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்துள்ளார்








