Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவாங் தே உதவி
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவாங் தே உதவி

Share:

கெடா, கூலிம் மாவட்டத்தில் பெய்த கனத்த மழையில் பல இடங்கள் தீடீர் வெள்ளம் ஏற்பட்ட
நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தையும் பொருட்படுத்தாமல் கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அவாங் தே லியான் ஓங் உடனடியாக உதவிக் கரம் நீட்டினார்.

வெள்ளத்தினால் கூலிம் தெராப் பகுதியில் பல வீடுகள் பாதிக்கப்பட்டதுடன் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில் போக்குவரத்து நிலைக்குத்தியது. காலை முதல் இரவு வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வரும் தே லியான் ஓங், தமது தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்துவிட்டு பாத்திக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலவரத்தை கேட்டு அறிந்தார்.

சில இடங்களில் வெள்ளம் கரைப்புரண்டோடிய நிலையில் பாதிக்கப்பட்ட சாலைகளை நேரில் பார்த்ததுடன் சாலைகளில் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் தே லியான் ஓங் செய்தார்.

கடந்த 10 ஆண்டு காலமாக கூலிம் வட்டார மக்களுக்கு வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதை ஒரு வேள்வியாக கொண்டுள்ள தே லியான் ஓங் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூலிம் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டால் இந்த திடீர் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!