Jun 28, 2026
Thisaigal NewsYouTube
முத்திரை வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்! தவறுகள் செய்தாலும் அபராதம் இல்லை - எல்எச்டிஎன் அதிரடி அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

முத்திரை வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்! தவறுகள் செய்தாலும் அபராதம் இல்லை - எல்எச்டிஎன் அதிரடி அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.21-

STSDS எனப்படும் புதிய 'சுய மதிப்பீட்டு முத்திரை வரி முறைக்கு' மக்கள் எளிதாக மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டு முழுவதும் விண்ணப்பங்களில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் விதிக்கப்படாது என உள்நாட்டு வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது. முத்திரை வரி படிவங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்படும் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் போன்ற குற்றங்களுக்கு, 1949-ஆம் ஆண்டு முத்திரை வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தண்டனைகளில் இருந்து இந்த ஓராண்டு காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மின்னியல் முறையில் தாங்களாகவே முத்திரை வரி செலுத்தும் முறையைப் பழகிக் கொள்ளவும், சட்ட திட்டங்களுக்குத் தானாக முன்வந்து கீழ்ப்படியவும் கால அவகாசம் அளிப்பதே இந்தச் சலுகையின் முக்கிய நோக்கமாகும். இது தொடர்பான சந்தேகங்களுக்கு MyTax இணையதளம் அல்லது HASiL தொடர்பு மையத்தை நாடலாம் எனக் கூறியுள்ள எல்எச்டிஎன், இப்போதே இந்த மின்-முத்திரை வரி முறையைச் சோதித்துப் பார்க்க ஆரம்ப அணுகலையும் வழங்கியுள்ளது.

Related News