Mar 14, 2026
Thisaigal NewsYouTube
"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

மேற்காசிய போர் காரணமாக, பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்குவதாகக் கூறப்படும் தகவலை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஜோகூர் மாநில இலாகா மறுத்துள்ளது.

அத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சந்தையில் போதுமான அளவில் இருப்பதாகவும் அதன் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பொருட்களின் விநியோகமானது, ஹரி ராயா பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் போதுமானதாக இருக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து நிலைகளிலும் பொருட்களின் விநியோகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இன்று சனிக்கிழமை ஜோகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிலிஸ் சஸ்லிண்டா தெரிவித்துள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

"நாட்டை விட்டு தப்பியோடவில்லை – ஐஜிபியைச் சந்தித்து விசாரணைக்கு ஒத்துழைப்பேன்"-  ஸம்ரி வினோத் தகவல்

"நாட்டை விட்டு தப்பியோடவில்லை – ஐஜிபியைச் சந்தித்து விசாரணைக்கு ஒத்துழைப்பேன்"- ஸம்ரி வினோத் தகவல்