ஜோகூர் பாரு, மார்ச்.14-
ஜோகூர் மாநிலம், பத்து பஹாட் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.2 அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று சனிக்கிழமை, மாலை 6.07 மணியளவில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பத்து பஹாட் பகுதியின் தென்கிழக்கே சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோகூர் கடற்பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மெட்மலேசியா அறிவித்துள்ளது.








