தமது காதலியுடன் ஓர் உணவகத்தில் இரவு உணவு உட்கொண்டிருந்த ஆடவரை கும்பல் ஒன்று, பாராங் மற்றும் ஹாக்கி மட்டைகளை ஆயுதமாக பயன்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போலீசார் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர். சரவா, கூச்சிங்கில் நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் தங்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி, காதலியின் முன் அவமானப்படுத்தியதாக கூறப்படும் அந்த கும்பல், பின்னர் அந்த ஆடவரை சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை தாக்கியதாக நம்பப்படும் ஐவர் அடங்கிய கும்பலை வளைத்தப் பிடித்ததாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜாவ் ஷியோங் தெரிவித்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


