தமது காதலியுடன் ஓர் உணவகத்தில் இரவு உணவு உட்கொண்டிருந்த ஆடவரை கும்பல் ஒன்று, பாராங் மற்றும் ஹாக்கி மட்டைகளை ஆயுதமாக பயன்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போலீசார் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர். சரவா, கூச்சிங்கில் நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் தங்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி, காதலியின் முன் அவமானப்படுத்தியதாக கூறப்படும் அந்த கும்பல், பின்னர் அந்த ஆடவரை சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை தாக்கியதாக நம்பப்படும் ஐவர் அடங்கிய கும்பலை வளைத்தப் பிடித்ததாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜாவ் ஷியோங் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


