தமது காதலியுடன் ஓர் உணவகத்தில் இரவு உணவு உட்கொண்டிருந்த ஆடவரை கும்பல் ஒன்று, பாராங் மற்றும் ஹாக்கி மட்டைகளை ஆயுதமாக பயன்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போலீசார் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர். சரவா, கூச்சிங்கில் நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் தங்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி, காதலியின் முன் அவமானப்படுத்தியதாக கூறப்படும் அந்த கும்பல், பின்னர் அந்த ஆடவரை சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை தாக்கியதாக நம்பப்படும் ஐவர் அடங்கிய கும்பலை வளைத்தப் பிடித்ததாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜாவ் ஷியோங் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


