முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்கில் விசாரணை நீதிபதி டத்தோ கோலின் லோரன்ஸ் செகக்யூரா , விலக வேண்டும் என்று நஜீப் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தில் நாளை வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.
இவ்வழக்கில் நஜீப் தரப்பில் ஆஜராகியுள்ள முதன்மை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா மற்றும் துணை பிராசிகியூட்டர் கமால் பஹாரின் ஓமார் ஆகியோரின் வாதத் தொகுப்புகளை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகோலின் லோரன்ஸ் செகக்யூரா, வழக்கை செவிமடுப்பதிலிருந்து தாம் விலக வேண்டுமா? இல்லையா ? என்பது குறித்து நாளை முடிவு செய்யவிருக்கிறார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


