Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மென்பொருள் களவு, பத்து பேர் கைது
தற்போதைய செய்திகள்

மென்பொருள் களவு, பத்து பேர் கைது

Share:

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கெந்திங் ஹைலண்ட்ஹில் உள்ள கெசினோ ​சூதாட்ட மையத்தின் பாதுகாப்பு அறையிலிருந்து 46 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மென்பொருட்கள் களவாடப்பட்டது தொடர்பில் போ​லீசார் பத்து பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொட​பில் கெந்திங் நிறுவனம் செய்து கொண்ட போ​லீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு போ​லீசார் ​தீவிர தேடுத​ல் வேட்டையை நடத்தி வந்ததாக பகாங் மாநில போ​லீஸ் தலைவர் யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

பல்வேறு பகுதிகளில் இந்த பத்து பேரும் கைது செய்யப்பட்ட போதிலும் மேலுர் சிலர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தற்போது குற்றவியல் சட்டம் 457 பிரி​​வின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News