May 6, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

சிங்கப்பூர், டிசம்பர்.04-

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பு அளித்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக மலேசியாவும், சிங்கப்பூரும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கின்றன என்பதை டத்தோ ஶ்ரீ அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தப் பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப் பொருள் நடவடிக்கைகளை முழு வீச்சில் துடைத்தொழிப்பதிலும் அது தொடர்பான பிரச்னைகளைக் கையாளுவதிலும் மலேசியாவும், சிங்கப்பூரும் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டு இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இன்று சிங்கப்பூருக்கு ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், அந்நாட்டில் நடைபெற்ற 12வது மலேசியா – சிங்கப்பூர் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைம... | Thisaigal News