May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது மாடுள் மோதப்பட்ட விபத்தில் உதவி போலீஸ்காரர் மரணம்
தற்போதைய செய்திகள்

ஒன்பது மாடுள் மோதப்பட்ட விபத்தில் உதவி போலீஸ்காரர் மரணம்

Share:

செத்தியூ, டிச.3-


4 வீல் டிரைவ் வாகனம் ஒன்று, ஒன்பது மாடுகளை மோதித் தள்ளி, / விபத்துக்குள்ளானதில் உதவி போலீஸ்காரர் ஒருவர், உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் ஜாலான் கோலத்திரெங்கானு – கோத்தாபாரு சாலையின் 57 ஆவது கிலோமீட்டரில் செத்தியூ என்ற இடத்தில் நிகழ்ந்தது.

கிளந்தான், பாசீர் மாஸ் பகுதியைச் சேர்ந்த 56 வயது சே முகமட் நாசிர் ஜப்பார் ஜப்பார் என்ற அந்த உதவி போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக செத்தியூ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஸைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

சாலையில் திடீரென்று கடக்க முற்பட்ட மாடுகளை மோதித்தள்ளிய டோயோட்டா ஹைலக்ஸ் வாகனம், பின்னர், எதிர்திசையில் நுழைந்த போது, எதிரே வந்த உதவி போலீஸ்காரரின் ஹோண்டா சிவிக் ரக காரில் மோதியது.

இதில் கடும் காயங்களுக்கு ஆளான உதவி போலீஸ்காரர் உயிரிழந்ததாக Mohd Zain தெரிவித்தார். இவ்விபத்தில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமுற்றன. Toyota Hilux வாகன ஓட்டுநர், எவ்வித காயங்களின்றி உயிர்தப்பினார். சில மாடுகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு