பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-
இன்று மாலையில் கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது.
யாரும் எதிர்பாராத நிலையில் ஆடவர் ஒருவர் LRT ரயில் இருப்புப்பாதைக்குள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக Rapit KL நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமேக் -கிற்கும்,பங்சார்- க்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரயில் இருப்புப்பாதையை சோதனையிடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.








