Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சிறுமிகளை கடத்தியதாக Pisang Goreng வியாபாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரண்டு சிறுமிகளை கடத்தியதாக Pisang Goreng வியாபாரி மீது குற்றச்சாட்டு

Share:

கோலசிலாங்கூர், ஜூலை 25-

கோலசிலாங்கூர்,ஜெராம் வட்டாரத்தில் இரண்டு சிறுமிகளை கடத்திய குற்றத்திற்காக Pisang Goreng வியாபாரி ஒருவருக்கு, சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 24 மாத சிறையும், 2 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.

31 வயது முகமது ஷரிசா ஒத்மான் என்ற அந்த பீசாங் கோரேங் வியாபாரி தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சிதி ஹாஜர் அலி மேற்கண்ட தண்டனையை விதித்தார்.

சம்பந்தப்பட்ட பீசாங் கோரேங் வியாபாரி, கடந்த ஜுலை 19 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கோலசிலாங்கூர், ஜெராம், தமான் இகான் எமாஸ், ஜாலான் இகான் எமாஸ் 2 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தன்னுடன் வந்தால் 50 வெள்ளி தருவதாக கூறி, அந்த சிறுமிகளை அவர் கடத்திச் சென்றுள்ளார்.

6 மற்றும் 8 வயதுடைய அந்த சிறுமிகள் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டனர். தங்களை Perodua Bezza காரில் கடத்திச் சென்ற நபர், பின்னர் மற்றொரு தாமானில் இறக்கிவிட்டு சென்று விட்டதாக அந்த சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த பீசாங் கோரேங் வியாபாரி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

எனினும் தாம் செய்த குற்றத்திற்காக வருந்துவதாக அந்த பீசாங் கோரேங் வியாபாரி நீதிமன்றத்தில் தனது கருணை மனுவில் குறிப்பிட்டார். தனக்கு இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர் என்றும், பெண் பிள்ளைகள் இல்லை என்றும், அந்த சிறுமிகளை கண்டதும் பாசத்தின் அடிப்படையில் காரில் ஏற்றிக் சென்று பக்கத்து தாமானில் இறக்கிவிட்டதாக அந்நபர் தனது கருணை மனுவில் குறிப்பிட்டார்.

எனினும் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் சிதி ஹாஜர் அலி, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க சம்பந்தப்பட்ட நபருக்கு 24 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி